Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 கிரிக்கெட் : ஜிம்பாப்வேவை பழி தீர்த்தது இந்தியா

Webdunia
திங்கள், 20 ஜூன் 2016 (19:46 IST)
இன்று நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இந்தியா தோற்கடித்து, கடந்த ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. 


 

 
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய தோற்ற நிலையில், ஹரேரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிபாபா மற்றும் மசகட்ஸா இருவரும் தலா 10 ரன்கள் எடுத்து சரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சிக்கந்தர் ரஸா 1 ரன்னிலும், முடோம்போட்சி ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். இதனால், 28 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
 
பின்னர் பீட்டர் மோர் மற்றும் மால்கம் வால்லர் இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை மெதுவாக உயர்த்தினர். வால்லர் 14 ரன்னிலும், மோர் 31 ரன்னிலும் வெளியேறினர். இருவரும் இணைந்து 29 ரன்கள் குவித்தனர்.
 
பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் சரண் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
100 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 13.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. துவக்க ஆட்டகாரர்களாக களம் இறங்கிய கே.எல்.ராகுல் 47 ரன்களும், மந்தீப் சிங்கும் 52 ரன்களும் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தார்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments