Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்ஸியின் மாயாஜால கோல்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அர்ஜெண்டினா

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (07:16 IST)
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடையவுள்ள நிலையில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி நேற்றைய ஆட்டத்தில் பெற்ற அபார வெற்றியால் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
 
நேற்று அர்ஜெண்டினா அணி, நைஜீரிய அணியுடன் மோதியது. இந்த போட்டியில் வெல்லும் அணியே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்ததால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின. அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி கடந்த இரண்டு போட்டிகளில் கோல் எதுவும் போடாததால் அவருக்கு தனிப்பட்ட முறையிலும் நெருக்கடி இருந்தது
 
இந்த நிலையில் போட்டியில் ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்ஸி ஒரு அருமையான மாயாஜால கோலை அடித்தார். இதனால் அர்ஜெண்டினா முதல் பாதியின் முடிவில் 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது. 
 
இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி நைஜீரியா ஒரு கோல் போட்டு சமன்படுத்தியதால் ஆட்டம் விறுவிறுப்பானது. இந்த நிலையில் அர்ஜெண்டினாவின் மார்கஸ் ரோஜோ அபாரமாக ஒரு கோல் அடித்ததால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அர்ஜெண்டினா அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments