Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சாய்னா நேவல் தோல்வி

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (21:25 IST)
உலக  பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா  நேவல் தோல்வியடைந்தார்.

 ஜப்பான் நாட்டின் தலை நகர் டோக்கியோவில் 27 வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி   கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இத்தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்கள் திறமையைக் காட்டி வருகின்றனர்.

இந்த தொடரில், 23 ஆம் தேதி  பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19,21-9 என்ற நேர்செட் கணக்கில் ஹாங்காங்கின் சியுங் நாகன் என்பவ்ரை தோற்கடித்து, 2 வது சுற்றில் நுழைந்தார்.

2 வது சுற்று நடக்கும் முன் ஜப்பான் வீராங்கனை நொசோமி காயம் காரணமாக விலகியதால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சாய்னா நேவால்,  தாய்லாந்து வீராங்கனை புசானன் உடன் மோதினார். இத்ல், புசானன் 21-17, 16-21,21-13 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தினார்.
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments