Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் டி20 போட்டி: 84 ரன்களில் சுருண்ட தெ.ஆ. அணி.. விக்கெட் இழப்பின்றி இந்தியா அபார வெற்றி..!

Siva
புதன், 10 ஜூலை 2024 (08:50 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே நடந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சென்னை மைதானத்தில் நடந்த நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 17.1 ஓவரில் 84 ரன்கள் ஆல் அவுட் ஆனது.

இந்தியாவின் பூஜா அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் ராதா யாதவ் மூன்று கட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 85 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 10.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 54 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதை அடுத்து தொடர் சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments