Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணியில் நீடிக்கும் பிரச்சனை

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (09:11 IST)
நாளை வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டித் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியில் நான்காவதாக யாரை இறக்குவது என்ற குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது.

யுவ்ராஜ் மற்றும் ரெய்னா விலகலுக்குப் பிறகு இந்திய அணியில் யாரை நான்காவது பேட்ஸ்மேனாக இறக்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இதற்காக உலகக்கோப்பைக்கு ஓராண்டுக்கு முன்பே அம்பாத்தி ராயுடு, தோனி, ராகுல், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ரிஷப் பண்ட், மனீஷ் பாண்டே, விஜய் ஷங்கர் ஆகிய அனைவரையும் பரிசோதனை செய்து பார்த்தனர் கோஹ்லியும் ரவி சாஸ்திரியும். ஆனாலும் நிலையான வீரரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உலகக்கோப்பை தொடரில் விஜய் ஷங்கர், ராகுல் மற்றும் பண்ட் ஆகியோரை மாற்றி மாற்றி இறக்கினர். இதில் ரிஷப் பண்ட் மட்டும் ஓரளவு சிறப்பாக விளையாடினார்.

வெஸ்ட் இண்டீஸுடனான டி 20 தொடரில் ரிஷப் பண்ட் முதல் இருப் போட்டிகளில் சொதப்ப மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் நாளைத் தொடங்கவுள்ள போட்டியில் கூட நான்காவது இடத்துக்கு கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரெயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே போன்றோரில் யாரை இறக்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இதில் ஓரளவு சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பண்ட்டுக்கே அந்த இடம் இன்னும் சில நாட்களுக்கு பரிசோதனை அடிப்படையில் தரப்படும் எனத் தோன்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments