Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்று பேட்டிங் செய்ய இந்தியா முடிவு

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (09:25 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று புனே நகரில் நடைபெற உள்ளது

இந்த போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்

இதனை அடுத்து இரண்டு அணிகள் விளையாடும் 11 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால், விராட் கோலி, ரஹானே, சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகிய 11 பேரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் விஹாரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் தென்னாபிரிக்க அணியில் மார்க்கம், எல்கர், புரூன், பவுமா, டூபிளஸ்சிஸ், டீகாக், முத்துச்சாமி, ஃபிலண்டர், மஹாராஜ், ரபடா மற்றும் நார்ட்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments