Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருமே அந்த தோல்விக்குப் பின் நம்மை நம்பவில்லை – வெற்றிக்கு பிறகு கேப்டன் கோலி பதிவு!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (16:16 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இந்தியாவில் இருக்கும் கேப்டன் கோலி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஐந்தாம் நாளில் இந்திய அணி வெற்றிக்கு 321 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த சிட்னி டெஸ்ட் போலவே இந்த போட்டியையும் இந்திய அணி ட்ரா செய்ய முயலும் என நினைத்த ஆஸ்திரேலியாவுக்கு பேரிடியாக இந்திய அணி அதிரடியாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி மீண்டும் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் கேப்டன் விராட் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘என்ன ஒரு வெற்றி… அடிலெய்ட் டெஸ்ட் தோல்விக்குப் பின்னர் அனைவரும் நம்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். தன்முனைப்பும் ஒற்றுமையுமே வெற்றிக்குக் காரணம். வீரர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் வாழ்த்துகள். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியைக் கொண்டாடுவோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பேட்டிங்கில் அதிரடி காட்டாத ஐதராபாத்.. ராஜஸ்தானுக்கு எளிய இலக்கு..!

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments