Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி ப்டைத்த புது சாதனை... இருப்பினும் தோனி தான் டாப்பு!!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (08:26 IST)
இந்திய கிரிக்கெட் அணியை 200 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வழி நடத்தி சென்ற மூன்றாவது கேப்டன் என்ற மைல்கல்லை எட்டினார் விராட் கோலி. 

 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றதை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் எடுத்தது. 330 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது.  
 
கடைசி ஓவரை நடராஜன் வீச அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணியால் எடுக்கப்பட்டதால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டிக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியை 200 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வழி நடத்தி சென்ற மூன்றாவது கேப்டன் என்ற மைல்கல்லை எட்டினார் விராட் கோலி. 
 
ஆம், அவரது தலைமையில் இந்திய அணி 127 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளும் இதில் அடங்கும். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 332 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தியுள்ளார். அதே போல அசாருதீன் 221 போட்டிகளில் இந்தியாவை வழி நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

என் வாழ்க்கையில் நான் அடித்த மொத்த சிக்ஸ்களை அபிஷேக் ஷர்மா ஒரே இன்னிங்ஸில் அடித்துவிட்டார்… பாராட்டிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments