Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரை கைப்பற்றுவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று பலப்பரிட்சை

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (08:30 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் இன்று டெல்லியில் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது
 
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கும் இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் வெற்றிக்கு தீவிரமாக விளையாடும்
 
இந்திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கேப்டன் கோலி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். மேலும் இன்றைய போட்டியில் தோனி களமிறங்குவார் என தெரிகிறது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல ஃபார்மில் உள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்றைய போட்டியில் விராத் கோஹ்லி, தவான், ரோஹித் சர்மா, ராயுடு, ராகுல், தோனி, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், ஷமி, விஜய் சங்கர், ஆகியோர் விளையாடும் 11 பேர் அணியில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments