Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக இல்லை - விராட் கோலி

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (20:40 IST)
இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரில் இந்திய அணி வென்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகளில் ஒரு பகுதியாக உள்ளது.
எனவே நம் இந்திய அணியும் டெஸ்ட் கிரிகெட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் களமிறங்க உள்ளது. இப்படியிருக்க, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளதாவது: டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக இல்லை என ரசிகர்ள் கருதுகிறார்கள். ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியின் தரம் உயர்ந்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகத்திற்குப் பின்னர் போட்டிகள் மிக சவாலானதாக இருக்கும்.
 
மேலும் நம் இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்ஸ்மென்களாக எல்லோரும் ஒருங்கிணைந்து விளையாடவில்லை. சில வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், ஒரு அணிவீரர்களாக அனைவரும் சிறப்பாக விளையாடவில்லை. இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் சாம்பியன் ஷிப் போட்டி வந்திருப்பது இன்னும் சவாலாக இருக்கும் . காரணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்  அணில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments