Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: தெலுங்கு டைட்டான்ஸ், புனே அணிகள் வெற்றி

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (07:54 IST)
புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தேதி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் புனே அணிகள் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியுடன் மோதியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடி வந்த நிலையில் இரு அணிகளின் புள்ளிகளும் ஏறத்தாழ சமமாக இருந்து வந்தது. கடைசி நேரத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் 35-31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பாட்னா அணியை வீழ்த்தியது

இதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் புனே அணி ஜெய்ப்பூர் அணி 29-25 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இந்த நிலையில் இதுவரை 24 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏ பிரிவில் புனே, மும்பை மற்றும் ஹரியானா அணிகள் முதல் மூன்று இடங்களிலும், பி பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் முதல் முன்று இடங்களிலும் உள்ளது. பி பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments