Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி: ரசிகர்கள் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (23:09 IST)
புரோ கபடி போட்டி தொடர் நேற்று முன் தினம் முதல் நடந்து வரும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி, முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும் நேற்றைய இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று தெலுங்கு டைட்டான்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதியது.

ஆரம்பத்தில் தமிழ் தலைவாஸ் அணி அதிக புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்று வந்தாலும் நேரம் ஆக ஆக தெலுங்கு டைட்டான்ஸ் அணி புள்ளிகளை அடுத்தடுத்து பெற்றது. இறுதியில் தெலுங்கு டைட்டான்ஸ் அணி 33-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்று இரண்டாவது தோல்வி கிடைத்தது. இதனையடுத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும் பி பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதிய இன்னொரு போட்டியில் இரு அணிகளும் தலா 32 புள்ளிகள் எடுத்ததால் டிரா ஆனது. எனவே இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

சன்ரைசர்ஸை வெளுத்து வாங்கிய கொல்கத்தா! நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி.! தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு..!

குவாலிஃபையர் 1: டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு.. ரன்மழை பொழியுமா?

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments