Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ்

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (22:32 IST)
புரோ கபடி போட்டி தொடரில் தமிழ்தலைவாஸ் அணி கடந்த திங்கட்கிழமை ஜெய்ப்பூர் அணிக்கு எதிராக போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்று மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பி உள்ளது

இன்று நடைபெற்ற பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது

புரோ கபடி போட்டி தொடரில் தொடர் தோல்விகளை பெற்று வந்த தமிழ் தலைவாஸ் அணி கடந்த திங்களன்று ஜெய்ப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் வென்றதால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி விட்டது என தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காத வகையில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாசல் தோல்வியுற்றது. இன்றைய வெற்றியின் மூலம் பெங்கால் அணி முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

இன்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் அணி 33 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 29 புள்ளிகளும் பெற்றதை அடுத்து பெங்கால் அணி அதிரடியாக வெற்றி பெற்றது

இதனை அடுத்து இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி உபி அணியை வென்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41 புள்ளிகளும் உபி அணி 36 புள்ளிகளும் எடுத்ததால் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த நிலையில் பெங்கால், டெல்லி, ஹரியானா, உபி மற்றும் மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments