Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஏமாற்றிய கே.எல்.ராகுல்: 2வது ஓவரிலேயே விழுந்த விக்கெட்

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (06:34 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இதுவரை நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று சிட்னியில் 4வது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்

கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த போட்டியிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ராகுல் 9 ரன்களுக்கு இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதனையடுத்து தற்போது புஜாரா மற்றும் அகர்வால் ஆடி வருகின்றனர். அகர்வால் 50 பந்துகளில் 29 ரன்கள் அடித்துள்ளார். இந்திய அணி சற்றுமுன் வரை 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தொடரை வென்ற பெருமையும், தோல்வி அடைந்தால் தொடரை சமன் செய்ததாகவும் அமையும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments