Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்து vs ஆப்கானிஸ்தான்… கவாஸ்கர் சொல்லும் ஆருடம்!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (15:27 IST)
நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி பற்றி இந்தியாவின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்து அணியை இந்தியா 7 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு முன்னால் நாம் உள்ளோம். இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடக்கும்  போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும். அதனால் இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வழி மேல் விழிவைத்து காத்திருக்கின்றனர்.

இந்த போட்டி பற்றி பேசியுள்ள இந்தியாவின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘இந்தியா பாகிஸ்தான் போட்டியை விட இந்த போட்டியை அதிகம் பேர் பார்ப்பார்கள். ஆப்கானிஸ்தான் போலவே இந்த போட்டியில் நியுசிலாந்து அணிக்கும் நெருக்கடி இருக்கும். அதை சமாளித்து விட்டால் அவர்கள் எளிதாக வெற்றி பெறுவார்கள். 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைகளில் சிறப்பாக விளையாடி அவர்கள் இறுதிப்போட்டி வரை சென்றுள்ளார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments