Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்விகள்; மூன்று மாதத்தில் 7 கேப்டன்கள் மாற்றம்: என்ன ஆனது இலங்கைக்கு??

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (12:00 IST)
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இலங்கை அணிக்கு ஏழு கேப்டன்களை நியமித்துள்ளனர். ஆனாலும் இலங்கை அணி போட்டிகளில் வென்றபாடில்லை. 


 
 
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 அனைத்திலும் தோல்வியடைந்தது இலங்கை கிரிக்கெட் அணி.
 
தற்போது பாகிஸ்தானுடன் விளையாடி வரும் நிலையில், டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாலும், ஒரு நாள் போட்டியில் வொய்ட் வாஷ் செய்யப்பட்டது.  
 
அடுத்து பாகிஸ்தானுடன் டி-20 போட்டியில் விளையாடவுள்ளது. டி20 போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு புதிய கேப்டனாக திசாரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.  
 
கடந்த மூன்று மாதங்களில் ரங்கனா ஹெராத், தினேஷ் சந்தமால், சமாரா குபுகேதரா, லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கரா ஆகியோர் கேப்டன்களாக இருந்துள்ளனர். தற்போது திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இலங்கை அணி பல முக்கிய வீரர்களை இழந்துள்ள நிலையில், அணி மேலும் சரிவை நோக்கி பயணிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments