Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டும் இலங்கை கிரிக்கெட் வீரர்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:37 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரன்தீவ் ஆஸியில் பேருந்து ஓட்டுனராக இப்போது பணிபுரிந்து வருகிறார்.

இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளுக்காக 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் சுரேஷ் ரன்தீவ். இவர் சேவாக்குக்கு ஒரு நோ பால் போட்டு உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் விமர்சனங்களை சந்தித்தார். இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் இப்போது ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுனராக செயல்பட்டு வருகிறார். வருவாய் ஈட்டும் நோக்கில் அவர் இந்த வேலையை செய்து வருவதாக கூறியுள்ளார்.

36 வயதான ரன்தீவ் இலங்கை அணிக்காக 12 டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 7 டி 20 போட்டிகள் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments