Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டி: 2 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து இந்தியா திணறல்

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (11:57 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் இன்று தர்மசாலாவில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இலங்கை அணியின் அனல் பறக்கும் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரரும் இந்திய அணியின் கேப்டனுமாகிய ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

சற்றுமுன் வரை இந்திய அணி ஐந்து ஓவர்களில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது. விராத் கோஹ்லி இல்லாத இந்திய அணியை தனது அபாரமான பந்துவீச்சால் இலங்கை திணறடித்து வருவதாக வர்ணனையாளர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments