Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி - கோப்பையை தவறவிட்ட பி.வி.சிந்து

Webdunia
திங்கள், 16 ஜூலை 2018 (15:59 IST)
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பங்குபெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் ஒக்குஹாராவிடம் தோல்வியடைந்தார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒக்குஹாராவை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சிந்து ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஒக்குஹாராவின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார்.
 
முதல் சுற்றில் 21-15 என்ற கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார். பின்னர் இரண்டாம் ஆட்டத்தில் 11-9 என்ற நிலையில் முன்னிலை பெற்ற சிந்து தொடர்ந்து அதை தக்க வைக்க முடியவில்லை. பின்பு, 18-18 என்ற சம நிலையை எட்டியது ஆட்டம். அதன் பின் ஒக்குஹாரா தொடர்ந்து மூன்று புள்ளிகளை அதிரடியாக பெற்று, ஆட்டத்தை தன் வசமாக்கினார்.
இதன்மூலம் சிந்து இந்த போட்டியில் தோல்வியை தழுவினார். இதேபோல் சிந்து இந்த வருடத்தில் நடைபெற்ற இந்தியா ஓபன் மற்றும் காமன்வெல்த் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்து தங்கப்பதக்கம் வெல்லும் வாய்பை நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி… தோல்விப் பாதையில் இந்தியா!

350 ரன்களுக்கு மேல் இலக்கு… இரண்டு முறையும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

இந்தியாவின் பீல்டிங் டெஸ்ட் தரத்தில் இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர்

5 சதங்கள் அடித்தும் தோல்வி.. இந்தியாவின் மோசமான உலக சாதனை..!

சொன்ன மாதிரியே வெற்றி பெற்ற இங்கிலாந்து.. ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தால் கிடைத்த வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments