Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அணியில் இருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்!

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (10:34 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.

எல்லா சீசன்களிலும் கடைசி அணியாக வந்து கொண்டிருந்த டெல்லி அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டிவரை சென்றது. அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியில் புதிய இளம் வீரர்கள் புகுத்த்தப்பட்டது, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பதவியை ஏற்றதும்தான். அந்த அளவுக்கு சிறப்பாக அணியை வழிநடத்தினார் ஸ்ரேயாஸ்.

இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பீல்டிங்கின் போது காயமடைந்தார். தோள்பட்டையில் எலும்பு இடம் மாறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தபோது காயத்திலிருந்து மீண்ட அவர் அணிக்கு வந்தார். ஆனால் அவருக்குக் கேப்டன் பதவி வழங்கப்படவில்லை. பண்ட்டே கேப்டனாக தொடர்ந்தார். இது சம்மந்தமாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அடுத்த ஏலத்தில் அவர் வேறு அணிக்கு மாற முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments