Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தின் சிறப்புகள் என்ன??

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (09:41 IST)
இன்று அகமதாபாத்தில் உள்ள பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. 

 
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி இன்று அகமதாபாத்தில் உள்ள பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பகலிரவு ஆட்டமாக 3வது டெஸ்ட் போட்டி துவங்குகிறது. 
 
63 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் 4 நுழைவு வாயில்கள் உள்ளன. 
 
பிரதான மைதானத்தில் மட்டுமே 11 ஆடுகளங்கள் உள்ளன. 8 செ.மீ. வரை மழை பெய்தாலும் போட்டி ரத்தாகாத வகையில், உடனடியாக நீரை உறிஞ்சி வெளியேற்றும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
மைதானத்தில் நிழல் விழாத அளவுக்கு பிரத்யேக எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 
 
அருகிலேயே உள்ளரங்கு கிரிக்கெட் பயிற்சி அகாடமி, பிரம்மாண்ட உணவகம், மினி 3டி திரையரங்கம், நீச்சல்குளம், பயிற்சிக்கென 2 மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 
 
6 உள்ளரங்க ஆடுகளங்களும், அவற்றில் பவுலிங் மெஷின்களும் அமைக்கப்பட்டுள்ளன. 
 
விருந்தினர்கள் தங்குவதற்காக 50 டீலக்ஸ் அறைகளுடன் க்ளப் ஹவுசும் வளாகத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments