Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் 6 பந்துகள் எதிர்க்கொண்டு உலக சாதனை படைத்த ரோகித் சர்மா

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (13:37 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைப்பெற்ற முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா சிக்ஸரில் உலக சாதனை படைத்தார்.


 

 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே முதல் டி20 போட்டி ராஞ்சில் சனிக்கிழமை நடைப்பெற்றது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 7 பந்துகளில் 11 ரன்கள் குவித்து வெளியேறினார். 
 
இவர் எதிர்க்கொண்ட 6 பந்துகளில் ஒரு சிக்ஸர் விளாசினார். இதன்மூலம் இவர் சிக்ஸரில் உலக சாதனை படைத்தார். வெகு நாட்கள் கழித்து பழைய ஃபார்ம்க்கு வந்துள்ள ரோகித் சர்மா நடந்து முடிந்த ஒருநாள் போட்டி தொடரில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 
 
முதலாவது டி20 போட்டியில் வெறும் 7 பந்துகள் மட்டுமே எதிர்க்கொண்டார். 7வது பந்தில் போல்டானார். 6 பந்துகளில் 11 ரன்கள் குவித்தார். அதில் ஒரு சிக்ஸர் அடங்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் 30 சிக்ஸருக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
 
ஆஸ்திராலிய அணிக்கு எதிராக விளையாடும் டி20 போட்டிகளில் இந்திய அணி மற்றும் வீரர்கள் பல சாதனைகள் படைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments