லார்ட்ஸ் மைதானத்தில் ரோஹித் சர்மா செய்த சாதனை!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (18:06 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இன்று 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் தற்போது இந்திய அணியினர் பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய அணி சற்று முன் வரை 18.4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டுள்ளது
 
இந்த நிலையில் இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியுள்ள ரோஹித்சர்மா ஒரு புதிய சாதனை செய்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டி ஆகிய மூன்று விதமான போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காராக  விளையாடிய ஒரே வீரர் ரோகித் சர்மா என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது
 
கடந்த 2009ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியின் போதும், 2018 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும், தற்போது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் ரோகித்சர்மா விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments