Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சிஎஸ்கே வீரர் ஓய்வு

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (19:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
 
 இதனை அடுத்து அடுத்து ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக அவர் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராபின் உத்தப்பா முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருந்து வந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
46 ஒருநாள் போட்டிகள், 13 டி20 போட்டிகள் மற்றும் 205 ஐபிஎல் போட்டிகளில் ராபின் உத்தப்பா விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments