Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் கொடுத்த 183 இலக்கை நோக்கி விரட்டி வரும் ராஜஸ்தான்

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (22:36 IST)
இன்றைய ஐபிஎல் போட்டி பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 52 ரன்களும், மில்லர் 40 ரன்களும், கெய்லே 30 ரன்களும் அகர்வால் 26 ரன்களும் எடுத்தனர். கடைசியில் கேப்டன் அஸ்வின் 4 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அசத்தினார். 
 
ராஜஸ்தான் தரப்ப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். குல்கர்னி, உனாகட் மற்றும் செளதி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த நிலையில் 183 என்ற இலக்கை நோக்கி தற்போது ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.
 
சற்றுமுன் வரை ராஜஸ்தான் அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் திரிபாதி 31 ரன்களும் சஞ்சு சம்சன் 11 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். பட்லர் 23 ரன்களுக்கு அவுட் ஆனார். ராஜஸ்தான் அணி இன்னும் 12 ஓவர்களில் 110 எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments