Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை போராடி தோல்வி: ராஜஸ்தான் த்ரில் வெற்றி

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (23:49 IST)
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ரன்கள் எடுத்தது. ரெய்னா 52 ரன்களும், வாட்சன் 39 ரன்களும் கேப்டன் தோனி 33 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, ஆரம்பம் முதலே அடித்து விளையாடியது. இருப்பினும் கடைசி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை. இரண்டாவது பந்தில் 2 ரன்களும், மூன்றாவது பந்தில் 2 ரன்களும், நான்காவது பந்தில் ஒரு சிக்ஸரும் அடித்ததால் இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது.
 
இந்த நிலையில் ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 10 புள்ளிகள் எடுத்து 6வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments