Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளியா? தென்னாபிரிக்க முன்னாள் வீரர்களுக்கு புஜாரா பதில்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (06:55 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. திருமண ஓய்வுக்கு பின் விராத் கோஹ்லி மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனது மனைவியுடன் தென்னாபிரிக்கா சென்றுள்ளார்

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தென்னாப்பிரிக்க ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா, 'தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் பந்து அதிகமாக எகிறக்கூடிய இந்த ஆடுகளம் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. இது மாதிரியான பிட்சில் எங்களால் விளையாட இயலும். சிறப்பாக விளையாடுவதில்தான் எங்களது கவனம் இருக்கும். எப்படி திட்டமிட்டபடி விளையாடுவது என்பதில் தெளிவாக இருக்கிறோம். எந்தவிதமான ஆடுகளத்தில் ஆடுவதற்கு எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம்

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்