Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (07:38 IST)
இந்த ஆண்டுக்கான புரோ கபடி தொடர் போட்டிகள் நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னாவுடன் மோதியது. இந்த போட்டியை கமல்ஹாசன் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தேசிய கீதம் பாடி போட்டியை தொடாங்கி வைத்தார். தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதர் விஜய்சேதுபதி போட்டியை நேரில் கண்டு ரசிக்க வருகை தந்தார்

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். முதல் 18 நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் அணி 16-6 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் இருந்தது. இந்த ஆதிக்கம் கடைசி வரை இருந்ததால் தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. அதேபோல் நேற்று நடைபெற்ற புனே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி உபி அணியுடனும், புனே ஹரியானா அணியுடனும் மோதவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments