Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (11:46 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் இந்திய அணிக்கு முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் உலக கோப்பை சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் அனைவரிடமும் பேசி பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக அணியை சிறப்பாக வழி நடத்திய கேப்டன் ரோகித் சர்மா, இறுதிப் போட்டியில் அரைசதம் விலாசிய விராட் கோலி ஆகிய இருவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
அதுமட்டுமின்றி கடைசி ஓவர் வீசிய ஹர்திக் பாண்டியா,  அந்த ஓவரில் டேவிட் மில்லர் கேட்சை அபாரமாக பிடித்த சூரியகுமார் யாதவ் ஆகிய இருவருக்கும் தனது ஸ்பெஷல் பாராட்டுகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிடிற்கும் பிரதமர் பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments