Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு – இந்திய வீரர் அறிவிப்பு!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (15:18 IST)
இந்திய கிரிகெட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த பார்த்தீவ் படேல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

17 வயது சிறுவனாக இந்திய கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர் பர்த்தீவ் படேல். தோனிக்கு முன்னதாகவே அறிமுகமானாலும் அதன் பின்னர் தோனியின் வருகையால் அதன் பின்னர் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கி அவ்வப்போது கவனத்தை ஈர்க்கும் விதமாக விளையாடி வந்தார். இதையடுத்து கடைசியாக அவர் 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இதுவரை 25 டெஸ் போட்டிகளில் விளையாடி 934 ரன்களும், 38 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 736 ரன்களும் சேர்த்துள்ளார். அதே போல 2 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருக்கு வயது 35. இப்போது அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments