Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யு-19 அணியில் இடம் மறுப்பு: தூக்கில் தொங்கிய கிரிக்கெட் வீரர்!

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (17:38 IST)
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன், யு-19 அணி தேர்வில் நிராகரிக்கப்பட்டதால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
1990-களில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று விளையாடியவர் அமீர் ஹனிப். இவரின் மகன் முகம்மது ஜர்யப். இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 
 
இவர் பாகிஸ்தான் அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பெற தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார். ஆனால், இவருக்கு வயது அதிகம் என்பதால் அணி தேர்வாளர்கள் இவரை  நிராகரித்து விட்டனர். 
 
இதனால், மனமுடைந்த முகம்மது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், பாகிஸ்தான் ஊடகங்கள், சமீபத்தில் லாகூரில் நடந்த போட்டியில் ஜர்யப் விளையாடும் போது, காயம் ஏற்பட்டது. 
 
இதனால், அவரை போட்டியில் இருந்து அனுப்பிவிட்டனர், அப்போது, மீண்டும் வாய்ப்பு தருகிறோம் என கூறி அனுப்பிவிட்டனர். ஆனால், வாய்ப்பு வழங்காததால் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments