Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்மை கிரிக்கெட்டால்தான் ஒன்றிணைக்க முடியும்! – பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (18:18 IST)
இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்த கிரிக்கெட்டால் முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர்.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறவே இல்லை. உலக கோப்பைகளில் மோதி கொள்வது தவிர்த்து ஒருநாள் மற்றும் டி 20 ஆட்டங்களில் கூட இரண்டு அணிகளும் விளையாடுவதை தவிர்த்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இனைந்து விளையாட வேண்டியது அவசியம் என முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முஷ்டாக் அகமது கூறியுள்ளார். மேலும் ”இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் மீண்டும் நடைபெற வேண்டும். கிரிக்கெட்டால் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்படும் என்று நம்புகிறேன். இரண்டு நாடுகளும் இணைந்து விளையாட வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

ஆஷஸ் கோப்பை விளையாட்டு தொடரை விட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் சுவாரஸ்யமானது” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments