Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிபி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2015 (15:37 IST)
செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டி.யில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.


 
 
உலகச் சாம்பியன்ஷிப் என்று சொல்லப்படும் ஏடிபி சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் முதல் நிலை வீரரான ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடர்ருடன் மோதினார். 

இந்நிலையில், கடந்த லீக் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தியதால், ரோஜர் ஃபெடரர் வெற்றி பெருவார் என்ற நம்பிக்கையுடன் அவருடன் விளையாடினார். 
 
விருவிருப்பாக நடந்த இறுதி போட்டியில் ஃபெடரரின் சவாலை முறியடித்த ஜோகோவிச் , 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன் மூலம் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்தாவது முறையாக ஜோகோவிச் பட்டம் வென்றார். தொடர்ச்சியாக அவர் வெல்லும் நான்காவது பட்டமாகும்.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments