Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது டி20 போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (12:32 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 போட்டி தொடரில் முதல் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்று விட்டது
 
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டியில் வெல்லிங்டன் நகரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சற்று முன் போடப்பட்ட டாஸில் நியூஸிலாந்து கேப்டன் செளதி டாஸ் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 
 
மேலும் இன்றைய அணியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை செளதி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா, ஷமி, ஜடேஜா ஆகியோர்கள் இல்லை. அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், சயினி ஆகியோர் உள்ளனர். இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களும் விபரங்கள் பின்வருமாறு
 
இந்தியா: சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சாஹல், நவ்தீப் சயினி, பும்ரா
 
நியூசிலாந்து: குப்தில், முன்ரோ, டாம் புரூஸ், டெய்லர், மிட்செல், டிம் செய்பிரிட், சாண்ட்னர், ஸ்காட், செளதி, இஷ் ஷோதி, பென்னட்

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments