Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்: தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (07:46 IST)
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் முதல்முறையாக தங்கம் வென்று இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாதனை செய்துள்ளார்.
 
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் வீர சோப்ரா தங்கம் வென்றார். 
 
அவர் இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து சாதனை செய்தார். முதல் முறையாக தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  
 
25 வயதான நீரஜ் சோப்ரா ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். அதன் பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
நீரஜ் சோப்ரா தங்கம் என்றதை எடுத்து அவரது சொந்த மாநிலமான ஹரியானாவில் மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments