Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி லீக்கில் ரூ.1 கோடிக்கு மேல் ஏலம் போன மோனு கோயத்

Webdunia
வியாழன், 31 மே 2018 (16:07 IST)
இந்தியாவில் நடைபெறும் புரோ கபடி லீக்கின் 6வது சீசனுக்கான வீரர்களின் ஏலத்தில் ரூ1½ கோடிக்கு ஏலம் போனார் மோனு கோயத்.
 
புரோ கபடி லீக் 6-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், பெங்களூரு புல்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
 
இந்த அணிக்களுக்கான வீரர்களின் ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் அதிகப்பட்சமாக இந்திய வீரர் மோனு கோயத் அரியானா ஸ்டீலர்ஸ் அணிக்காக ரூ1.51 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியில் விளையாடுவதற்காக தீப்க் ஹூடா ரூ 1.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஈரான் வீரான பாசெல் அட்ராசாலியை மும்பை அணி ரூ. 1 கோடிக்கு வாங்கியது.
 
இந்த சீசனில் கலந்து கொள்ளும் 12 அணிகளில் 9 அணிகள் ஓட்டுமொத்தமாக 21 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதில் தமிழ் தலைவாஸ் அணியை சேர்ந்த அஜய் தாக்குர், சி.அருண், அமித் ஹுடா ஆகிய 3 பேரும் அடங்குவர்.

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments