Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம்! கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:06 IST)
இன்று ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற இருப்பதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்பதும் இந்த ஆண்டும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 ஒவ்வொரு முறை இந்தியாவில் தேர்தல் நடைபெறும் போது வெளிநாட்டில் ஐபிஎல் போட்டி நடைபெறும் வழக்கம் என்பதால் இந்த ஆண்டும் துபாயில் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று துபாயில் ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் ஒரு மணிக்கு 2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் மினி ஏலம் நடைபெறும் என்றும் இதில் 216 இந்திய வீரர்கள் 119 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 333 வீரர்கள் ஏலப்பட்டியலில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 அணிகளின் சார்பில் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். டிராவிஸ் ஹெட், ரச்சித் ரவீந்திரா உள்ளிட்டோர் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி பதிலடி! 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா!

நேத்து விட்டதுக்கு இன்றைக்கு சேர்த்து செய்யும் இந்தியா! அபிஷேக் சர்மா அபார சதம்!

உலகக்கோப்பை அடிச்ச இந்திய அணியா இது? ஜிம்பாப்வேவிடம் தோல்வி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments