Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு ஓய்வு தேவை– பிசிசிஐக்கு முன்னாள் வீரர் அறிவுரை !

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (13:21 IST)
இந்திய கிரிக்கெட் கேப்டன் கோஹ்லிக்கு உலகக்கோப்பைக்கு முன்னதாக ஓய்வு அளிக்க வேண்டும் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார்.

12 ஆவது ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாக கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் கோஹ்லியின் கேப்டன்ஷிப் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில் இந்த தொடர் தோல்விகள் மனதளவில் கோஹ்லிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்  என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான் ‘இந்திய கிரிக்கெட் வாரியம் சரியாக திட்டமிட்டு உலகக் கோப்பைக்காக கோலிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உலகக் கோப்பை என்பது பெரிய போட்டி என்பதால் அதற்கு முன்பாக, அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது இன்றியமையாதது’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு தொடர்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதனால் இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

சென்னை அணியின் பிரச்சனைகளுக்கு ஜடேஜாதான் ஒரே தீர்வு… ஹர்ஷா போக்ளோ சொல்லும் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments