Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மேரிகோம்: குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (13:41 IST)
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மேரிகோம்
இந்தியாவின் பெருமைக்குரிய விளையாட்டு வீராங்கனையான மேரிகோம் ஏற்கனவே 6 முறை உலக சாம்பியன் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பாக்சிங் காலிறுதிக்கு தகுதி போட்டியில் இந்தியாவின் மேரிகோம் மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார் இதனை அடுத்து அவர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது மட்டுமின்றி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனையை மேரிகோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். அவரது வெற்றிக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து அவர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மேரிகோம் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று அதில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments