Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ஜெண்டினா தோல்வி - மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத மெஸ்ஸி [வீடியோ]

Webdunia
திங்கள், 27 ஜூன் 2016 (17:25 IST)
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் சிலி அணியிடம் அர்ஜெண்டினா அணி தோல்வி அடைந்ததை அடுத்து கேப்டன் மெஸ்ஸி மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
 

 
45ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் சாம்பியனுக்கான இறுதி போட்டி இன்று (திங்கட்கிழமை) இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு நியுயார்க் நகரில் நடைபெற்றது.
 
இந்த ஆட்டம் தொடங்கிய முதல் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில், தனக்குரிய வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டார். இதனால் 4-2 என்ற கோல் கணக்கில் சிலி அணி கோப்பையை கைப்பற்றியது.
 
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததை அடுத்து கேப்டன் லயோனல் மெஸ்ஸி கண்ணீர் விட்டு அழுதார். அவரை அர்ஜென்டினாவின் சக வீரர்களும், சிலி அணி வீரர்களும் கூட தேற்றினர். 
 
கடந்த கோபா அமெரிக்கா போட்டியின் இறுதிச்சுற்றிலும் இந்த இரண்டு அணிகள் மோதின. அந்த போட்டியிலும் பெனால்டி சூட் அவுட் முறையில் சிலி அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இங்கே:
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments