Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா விதிமுறை மீறல்: போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன் இங்கிலாந்து அணி வீரர் நீக்கம்

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (06:48 IST)
போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன் இங்கிலாந்து அணி வீரர் நீக்கம்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் திடீரென அணியிலிருந்து நீக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன் அனைவரும் இரண்டு முறை பரிசோதனைகளை எடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது
 
ஆனால் இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் விதிகளை மீறியதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்ட ஆர்ச்சர், 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவரது தனிமைபடுத்தப்பட்ட காலத்தில் இரண்டு பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் மட்டுமே அடுத்த போட்டி அவர் தொடரில் நீடிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து ஜோப்ரா ஆர்ச்சர் கூறியபோது ’நான் செய்த இந்த செயலுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன் என்றும், நான் என்னை மட்டுமல்ல நிர்வாகம் அனைத்தையும் அபாயத்தில் ஆக்கிவிட்டேன் என்றும் இதன் விளைவுகள் முழுவதையும் நான் பொறுப்பேற்கிறேன் என்றும், என்னுடைய செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments