Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2019: குவாலிஃபயர் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (18:16 IST)
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 39 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்னும் 17 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன
 
அதனையடுத்து முதல் நான்கு இடங்கள் பெற்ற அணிகள் குவாலிஃபயருக்கு தகுதி பெறும். முதலாம் இரண்டாம் இடம் பெற்ற அணிகள் மோதும் குவாலிஃபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். 3ஆம், 4ஆம் இடம் பெற்ற அணிகளுக்கு இடையிலான குவாலிஃபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் குவாலிஃபயரில் தோல்வி அடைந்த அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்
 
இந்த நிலையில் முதலாம் குவாலிஃபயர் போட்டி சென்னையிலும், இரண்டாம் குவாலிஃபயர் போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும் என்றும், இறுதி போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த போட்டி ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கேவுக்கு 4வது தொடர் தோல்வி.. ஆனாலும் தோனியின் 3 சிக்சர்களை ரசித்த ரசிகர்கள்..!

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments