Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாடும்போது ஏற்பட்ட காயத்தால் பிரபல கால்பந்து வீரர் மரணம்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (12:01 IST)
பிரபல கால்பந்து வீரர் சொய்ருல் குடா போட்டியின்போது ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் பிரபல கால்பந்து வீரர் சொய்ருல் குடா. லமான்கான் கிளப் சார்பாக 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் கோல்கீப்பராக விளையாடியுள்ளார்.

கிளப் சார்பாக நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர் அணியின் பந்தை தடுக்க முயன்ற போது பிரேசில் வீரரான ரமன் ராட்ரிகஸ் உடன் பயங்கரமாக மோதி கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு உடனடியாக மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த நாட்டின் கால்பந்து ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments