Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வீராங்கனைகளுக்கு கொரோனா: ஆசிய கோப்பையில் இருந்து விலகிய இந்தியா!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (09:48 IST)
12 வீராங்கனைகளுக்கு கொரோனா: ஆசிய கோப்பையில் இருந்து விலகிய இந்தியா!
இந்திய வீராங்கனை 12 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து தொடரில் இருந்து இந்திய அணி விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்திய மகளிர் அணி இடம் பெற்றுள்ளது என்பதும் இந்த அணி நேற்று சீன அணியை எதிர்கொள்ள காத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் போட்டிக்கு முன்னர் பரிசோதனை செய்யப்பட்டதில் 12 வீராங்கனைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து போட்டி தொடங்க சில நிமிடங்களுக்கு முன்பு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது
 
அதுமட்டுமின்றி இந்த தொடரில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 13 வீராங்கனைகள் இந்திய அணியில் இல்லை என்பதால் ஆசிய கோப்பையில் இருந்து இந்திய மகளிர் அணி விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டது
 
சொந்த மண்ணில் இந்திய வீராங்கனைகள் கோப்பை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனவு நனவானது வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி  கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த மும்பை.. 229 ரன்கள் இலக்கு..!

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

இதுதான்யா டீமு. 15 ஆட்டங்களில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருது… மாஸ் காட்டிய RCB!

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments