Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊக்கமருந்து பிரச்சனை: முடிவுக்கு வந்த இந்திய வீராங்கனையின் விளையாட்டு வாழ்க்கை

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (06:39 IST)
ஊக்கமருந்து பிரச்சனையால் பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கையே பறிப்போகியுள்ள நிலையில் இதே பிரச்சனை காரணமாக இந்திய தடகள வீராங்கனை பிரியங்கா என்பவருக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
 
29 வயதான இந்திய தடகள வீராங்கனையான பிரியங்கா கடந்த 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று இருந்தார். ஆனால் 2016ஆம் ஆண்டு இவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தியது
 
இந்த விசாரணையின் முடிவில் பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி இவர் தன் வாழ்நாளில் தடகள விளையாட்டில் விளையாட வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments