Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் டி-20 போட்டி: இந்தியா அபார வெற்றி

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (22:45 IST)
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை வென்ற இந்திய அணி, இன்று முதல் டி-20 போட்டியில் மே.இ.தீவுகள் அணியுடன் மோதியது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 109 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 110 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 6 ரன்களிலும், தவான் 3 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் ராகுல் 19 ரன்களிலும், ரிஷப் பண்ட் ஒரு ரன்னிலும் அவுட் ஆனதால் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 45 ரன்கள் மட்டுமே எடுத்து ஒருகட்டத்தில் தத்தளித்தது.

ஆனால் தினேஷ் கார்த்திக், பாண்ட்யா, மற்றும் பாண்டே ஆகியோர்களின் பொருப்பான ஆட்டத்தால் இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 110 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments