Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானை எதிர்த்து இந்திய கிரிக்கெட் அணி புரிந்த சாதனை....

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (18:26 IST)
பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில், பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
 
பார்வையற்றவர்களுக்கான 5 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 8 ஆம் தேதி துவங்கியது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்றன. 
 
இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதின. இந்த போட்டி ஷார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்தது. 
 
309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 பந்துகள் மீதம் இருக்கையில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ந்து 2 வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், கடந்த 2014 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடி கோப்பையை வென்றது. 

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments