Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-நியூசிலாந்து போட்டியும் ரத்து: ஆட்டநாயகன் மழை

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (19:57 IST)
தற்போது நடைபெற்று வருவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியா? அல்லது வருணபகவானின் கிரிக்கெட் போட்டியா? என்று கூறும் அளவிற்கு மழையால் போட்டிகள் ரத்தாகி வருவது கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. ஏற்கனவே மூன்று போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்றும் ஒரு பந்து கூட வீசப்படாமல் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது
 
இந்த தொடரில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் தோல்வியே அடையாததால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் டாஸ் கூட போடாமல் மழை காரணமாக போட்டி ஆரம்பிக்கப்படவே இல்லை. மழை விடும் என உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணி வரை காத்திருந்த நடுவர்கள், மழை நிற்பதற்கான அறிகுறியே தெரியாததால் சற்றுமுன் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவித்து இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் அளித்தனர். மொத்தத்தில் இன்றைய போட்டியில் மழை தான் ஆட்டநாயகன்
 
இதனால் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நாளை இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியாவது நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments