Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் மழை எதிரொலி: இந்தியா-இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் ரத்து..!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (18:10 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன
 
அந்த வகையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் டாஸ் போடப்பட்ட பின்னர் மழை பெய்தது. இதன் காரணமாக இன்றைய பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் திருவனந்தபுரம் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டமும் மழை காரணமாக தாமதம் ஆகி வருகிறது. இந்த போட்டியும் மழை தொடர்ந்து பெய்தால் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
இதனை அடுத்து இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments