Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது இன்னிங்ஸ்: தெறிக்கவிட்ட இந்தியா; தவிக்கும் இலங்கை

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (17:18 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

 
இந்தியா - இலங்கை அணிகள் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 373 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இன்றைய நான்காவது நாள் போட்டியில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்நிலையில் இலங்கை அணி 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
 
இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் குவித்து தடுமாறி வருகிறது. நாளை கடைசி நாள் போட்டியில் இலங்கை தோல்வியை தவிர்க்க போராட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

பேட்டிங்கில் அதிரடி காட்டாத ஐதராபாத்.. ராஜஸ்தானுக்கு எளிய இலக்கு..!

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments